Saturday, August 30, 2008

சிதைந்த சொல் வடிவங்கள் மக்கள் மொழி ஆகா - ம.இலெ.தங்கப்பா

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள விரும்பும் வேற்றுமொழிக்காரர்கள் -குறிப்பாக மேலை நாட்டினர் நாம் எழுதும் தமிழுக்கும் பேசும் தமிழுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு கண்டு குழப்பம் அடைகின்றனர். தமிழைத் திருத்தமாக எழுதும் நாம் அதைத் திருத்தமாகப் பேசுவதில்லை. 'பன்றி' என்று எழுதுகிறோம். பன்னி, அல்லது பண்ணி என்று பேசுகிறோம். பன்னிரண்டு பேச்சில் பன்னெண்டு ஆகிறது. இங்கே அங்கே என்பதைச் சிலர் இங்கன, அங்கன என்றும், சிலர் இங்கிட்டு அங்கிட்டு என்றும் பேசுகின்றனர். அவர்கள், இவர்கள் என்பவை அவுக இவுக என்றும், அவங்க இவங்க என்றும், அவாள் இவாள் என்றும் அவிய, இவிய என்றும் வட்டாரங்களில் உருமாறுகின்றன. திருந்திய தமிழைக் கற்றுக் கொண்ட பிறமொழியினருக்கு நாம் பேசுந்தமிழ் புரியவில்லை. இது முற்றும் வேறு மொழி போலிருக்கின்றதே என்கின்றனர்.

பல மொழிகளில் இந்த வேறுபாடு காணப்படுவதுதான் என்றாலும் தமிழில் இது மிக அதிகமாயிருக்கிறது.

பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.

மேலும் படிக்க

0 comments: