தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள விரும்பும் வேற்றுமொழிக்காரர்கள் -குறிப்பாக மேலை நாட்டினர் நாம் எழுதும் தமிழுக்கும் பேசும் தமிழுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு கண்டு குழப்பம் அடைகின்றனர். தமிழைத் திருத்தமாக எழுதும் நாம் அதைத் திருத்தமாகப் பேசுவதில்லை. 'பன்றி' என்று எழுதுகிறோம். பன்னி, அல்லது பண்ணி என்று பேசுகிறோம். பன்னிரண்டு பேச்சில் பன்னெண்டு ஆகிறது. இங்கே அங்கே என்பதைச் சிலர் இங்கன, அங்கன என்றும், சிலர் இங்கிட்டு அங்கிட்டு என்றும் பேசுகின்றனர். அவர்கள், இவர்கள் என்பவை அவுக இவுக என்றும், அவங்க இவங்க என்றும், அவாள் இவாள் என்றும் அவிய, இவிய என்றும் வட்டாரங்களில் உருமாறுகின்றன. திருந்திய தமிழைக் கற்றுக் கொண்ட பிறமொழியினருக்கு நாம் பேசுந்தமிழ் புரியவில்லை. இது முற்றும் வேறு மொழி போலிருக்கின்றதே என்கின்றனர்.
பல மொழிகளில் இந்த வேறுபாடு காணப்படுவதுதான் என்றாலும் தமிழில் இது மிக அதிகமாயிருக்கிறது.
பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.
மேலும் படிக்க
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Saturday, August 30, 2008
உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து - 2 நாம் தமிழர் என்கின்ற உணர்வு எப்பொழுதும் இருக்கக் கூடாதா? - தேவமைந்தன்
உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர்.
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.
மேலும் படிக்க
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.
மேலும் படிக்க
Subscribe to:
Posts (Atom)