Saturday, August 30, 2008

அனைத்துலகக் குற்றவியல் அறமன்றம் முன் இனப்படுகொலை புரிந்தோர் தண்டனை பெறும் நாள் வருக! - நந்திவர்மன், பொதுச்செயலாளர், திராவிடப்பேரவை

இனப்படுகொலை என்பதன் விளக்கங்களுள் பண்பாட்டுப் படுகொலையும் அடங்கும். தமிழர்கள் மட்டுமே பண்பாட்டுப் படுகொலை பற்றி ஒப்பாரி வைப்பார்கள் என எழுத்துக் கிறுக்கர்கள் ஏடுகள் தோறும் ஊடுருவி உளறி வைப்பது வழக்கம். கொரிய நாட்டை சப்பானிய நாடு அடிமைப்படுத்தி கொரிய மொழியையும் பண்பாட்டுப் படுகொலையை டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வு மாணவி திருவாட்டி மட்சுமரா தமது ஒப்பீட்டு ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டுக் காவலரணாக தெளிதமிழ், தமிழ்க்காவல் உள்ளிட்ட ஏடுகள் விளங்குவது போல 1898 - 1910 க்குமிடையே கொரிய மொழியை பண்பாட்டைப் பாதுகாக்க அவாங்சன் சின்மன் என்ற ஏடு சப்பானிய எதிர்ப்பலைகளைக் கிளப்பிற்று. அதை எதிர்தகொள்ள புற்றீசல் போல கொரிய மொழி ஏடுகளை சப்பானியர்கள் பின்னிருந்து இயக்கினார்கள். தமிழருக்கெதிரான கருத்துப்பரப்பும் பணியில் தமிழரல்லாதார் ஈடுபட்டுள்ள இன்றைய நிலை, கொரிய மக்கள் விழித்தெழந்து பல்லாண்டாகியும் தமிழர் வழித்திட வில்லை என்பதை வெள்ளிடை மலையென விளக்குகிறது.

பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.

மேலும் படிக்க

0 comments: