Thursday, October 2, 2008

தமிழ்ப்பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய தமிழ்கள் - முனைவர் இரா. திருமுருகன்

நம்மில் சிலர், முத்தமிழ் என்பது தமிழ் மொழியின் வேறொரு பெயர் என்று நினைக்கிறார்கள், அதை முத்தமிழ் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வேறு சிலர் முத்தமிழ் என்பன இயல். இசை. நாடகம் என்று தெரிந்துவைத்திருந்தாலும். அவற்றில் இசை என்பது இசைக்கலை என்றும். நாடகம் என்பது மேடை நாடகம் என்றும் கருதுகிறார்கள். பள்ளி விழாக்களில் உரையரங்கம், புல்லாங்குழல் முதலிய கருவியிசையரங்கம், மேடை நாடகம் ஆகியவற்றை நடத்திவிட்டு "முத்தமிழ் விழா நடத்தினோம்" என்கிறார்கள். புல்லாங்குழலில் வாசிப்பது வெறும் இசையே. அதில் தமிழ் இல்லை. எனவே அது இசைத்தமிழ் ஆகாது. அதுபோல் உரையாடல் பேசி நடிக்கும் இன்றைய மேடை நாடகங்கள் வெறும் நடிப்புக் கலையே. அது நாட்டியத்துக்கான தமிழ்ப்பாடல்-நாடகத்தமிழ்-ஆகாது. ஆசிரியர்கள் இதில் தெளிவில்லாதவர்களாக இருந்தால் மாணவர்களுக்கு இவற்றைத் தெளிவாகச் சொல்லிக்கொடுக்க முடியாது. மூன்று தனித்தனி இயல்புடைய தமிழ்களையே முன்னோர் முத்தமிழ் என்று குறித்தனர்.
மேலும் படிக்க

0 comments: